விருதுநகர்:தை அமாவாசை யொட்டி விருதுநகர் மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோயில் வளாகத்தில் காலை 6:00 மணி முதல் காலை 11:00 மணிவரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தர்பணம் செய்தனர். இதன் பின் சுவாமிக்கு விளக்கு ஏற்றி வழிபட்டனர். பசுவிற்கு கீரை, பழம் வழங்கிம் வழிபட்டனர். மாவட்டத்தில் திருச்சுழி,ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதிகளில் பக்தர்கள் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.