கள்ளக்குறிச்சி பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் நிகுலம்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2019 03:02
கள்ளக்குறிச்சி: பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்க ராதேவி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசையொட்டி நிகுலம்பலா யாகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று (பிப்., 3ல்) காலை 10:30 மணிக்கு யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் நடந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது.பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினர்.
பின்னர் யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்கள் சாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து தீபாரதனை வழிபாடு நடந்தது. ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.