பதிவு செய்த நாள்
06
பிப்
2019
11:02
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவர், உற்சவர், நந்திக்கு, 30 வகை அபிேஷகம் நடந்தது. உற்சவருக்கு ராஜ அலங்காரத்துடன், உள்பிரகார வலம் நடந்தது. மகா ருத்ராட்ச லிங்கத்திற்கு விசேஷ பூஜைகளுடன், தீபாராதனை நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், ஆத்துார் காசி விசுவநாதர் கோயில்களிலும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.