ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஈஷா யோக மையம் சார்பில் ஆதி யோகி சிலை ரதத்திற்கு பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்.
கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 4 ல் 25 ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா கொண்டாடப் பட உள்ளது. பக்தர்களை வரவேற்கும் விதமாக ஈஷா மையத்தில் இருந்து ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும் சென்று வருகிறது. பிப்.1 பெரியகுளத்தில் தொடங்கி தேனி, ஆண்டிபட்டி, ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக நேற்று ராஜபாளையம் வந்தது. பஞ்சு மார்க்கெட் பகுதியில் மேளதாளங்களுடன் வரவேற்று அழைத்து சென்றனர். ராஜபாளையம் மாடசாமி கோயில், பழைய பஸ் ஸ்டாண்ட், ஜவஹர் மைதானம் பகுதிகளில் பொது மக்கள் மலர் துாவி வழிபட்டதோடு பிரசாதம் பெற்று கொண்டனர். பல்வேறு ஊர்களுக்கு சென்று மார்ச் 1ல் ராமேஸ்வரத்தில் நிறைவடையும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.