Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பழமையான சோழர் கால கோவில் மார்ச் 7ல் ... மாசாணியம்மன் கோவிலில் பசுமை திட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்ல குணங்கள் உருவாக பக்தி அவசியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2012
11:02

பீளமேடு : நல்ல குணங்கள் உருவாக பக்தி இருக்க வேண்டும், என, வேலூர் பொற்கோவில் சக்தி அம்மா பேசினார். கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், வேலூர் நாராயணி பொற்கோவில் சார்பில், "சூக்த ஹோமம் நடந்தது. உலக மக்களுக்கு அமைதி, இயற்கை வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை கிடைக்க, இந்த ஹோமம் நடந்தது. பொற்கோவில் நிறுவனர் சக்தி அம்மா தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. ஹோமம் முடிந்ததும், சக்தி அம்மா பேசியதாவது: உலகில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகின்றனர். இதற்கென பூஜை, தியானம் செய்தாலும், மனதில் ஏதோ கஷ்டம், துக்கம் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. யாருக்கும் எந்த கஷ்டமும், கொடுக்காமல் இருந்தாலும், துன்பம் வருகிறது. இத்துன்பத்துக்கு காரணம், நாம் தினமும் செய்யும் பணிகள், கர்மா காரணமாக அமைகிறது. இந்த கர்மா, இந்த ஜென்மத்தில் மட்டுமின்றி, அனைத்து ஜென்மத்திலும் தொடரும். இந்த பிறவியில் நல்ல காரியங்களை செய்தால், அதன் பூர்வ ஜென்ம பலன், அடுத்த பிறவியிலும் தொடரும். முடிந்தவரை நல்ல காரியங்களையே செய்தால், பாவங்களை போக்கும். பாவங்களை போக்க தேவை பக்தி. ஒருவரிடம் பக்தி இருக்கும் போது தான் நல்ல குணங்கள் இருக்கும். கடவுளின் நாமத்தை உச்சரிக்கும்போது, நல்ல எண்ணங்கள் உருவாகும். இந்த குணம், துக்கத்தை விலக்கி, சந்தோஷத்தை அளிக்கும். மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க, அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு, சக்தி அம்மா பேசினார். காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வராகி மணிகண்ட சுவாமிகள், நீலமலை சித்தர், குற்றாலம் அருணாச்சல சுவாமிகள், தீர்த்தகிரி முருகன் சித்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar