பதிவு செய்த நாள்
12
பிப்
2019
11:02
சாயல்குடி: கன்னிராஜபுரம் ராமையா நாடார் குடியிருப்பில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ஆறாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. பிப்.,9ல் விநாயகர் பூஜை, நவக்கிரக, மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. மூலவர்கள் சுயம்புலிங்க சுவாமி, வெற்றி விநாயகர், பேச்சியம்மன், முன்னோடிசாமி, மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பிப்., 10ல் காலை 8:30 மணிக்கு மேல் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் விக்னேஷ்வர குருக்கள், உவரி சுயம்புலிங்க சுவாமி ஸ்தானிகர் அப்பர் மூர்த்தி ஆகியோர் செய்தனர். மாலையில் உலக நன்மைக்கான சிவலிங்க பூஜையில் பெண்கள் பங்கேற்று சிவவழிபாடு, அர்ச்சனை, மகேஸ்வர பூஜைகளை செய்தனர். இரு நாட்களும் தொடர் அன்னதானம் நடந்தது. நாட்டுப்புறக்கலைஞர்கள் செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.