பதிவு செய்த நாள்
13
பிப்
2019
12:02
சேலம்: திருவீதி உலாவில், சூரியபிரபை வாகனங்களில், ஐந்து கோவில்களின், உற்சவர் பெருமாள் சுவாமிகள் எழுந்தருளினர். ரத சப்தமியையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், கிருஷ்ணர், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர், அசோக் நகர் வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து, உற்சவர் பெருமாள் சுவாமிகள், சர்வ அலங்காரத்தில், நேற்று எழுந்தருளினர். தொடர்ந்து, சூரிய பிரபை வாகனங்களில், சிங்கமெத்தையிலுள்ள, சவுராஷ்டிரா திருமண மண்டபத்துக்கு, பக்தர்கள் கொண்டு வந்தனர். அங்கு, சுவாமிகளுக்கு மண்டகப்படி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். அவர்களுக்கு, துளசி தீர்த்தம், அன்னதானம் வழங்கப்பட்டது. சவுராஷ்டிரா துளசி வனமாலா மகளிர் குழுவினர், பக்தி பாடல் பாடி, பஜனை செய்தனர். பின், முக்கிய வீதிகள் வழியாக, உற்சவர் சுவாமிகள், திருவீதி புறப்பாடு நடந்து, அந்தந்த கோவில்களை அடைந்தன.