புதுச்சேரி வேதாஸ்ரம குருகுலத்தில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2019 03:02
புதுச்சேரி: புதுச்சேரி வேதாஸ்ரம குருகுலத்தில், கோவில் அர்ச்சகர்கள் மற்றும்பூசாரிகளுக்கு பூஜை முறைகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று (பிப்., 15ல்) துவங்கியது.ஆலய அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு, புதுச்சேரி அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீ வேதாஸ்ரம குருகுலம் இணைந்து நடத்தும் வேதாகம புராணங்கள், குறுகிய கால பயிற்சி முகாம் நேற்று (பிப்., 15ல்) கருவடிக்கப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில் துவங்கியது.150 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
வேதாஸ்ரம குருகுல ராஜா சாஸ்திரிகள் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், இந்து அறநிலையத்துறைஅதிகாரிகள் பங்கேற்றனர்.கதிர்காமம்பாலசுப்ரமணியன் சிவாச்சாரியார், வில்லியனூர் விஸ்வநாத சிவாச்சாரியார், திருபுவனை நரசிம்ம பட்டாச்சாரியார், சர்மா உள்ளிட்டோர், அர்ச்சர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.