பதிவு செய்த நாள்
18
பிப்
2019
03:02
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், இன்று (பிப்., 18ல்) தெப்போற்சவம் நடக்கிறது.
இதை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, மலர் அலங்கார சுவாமி, கோவிலிலிருந்து புறப்பட்டு, கோவில் தீர்த்த தெப்பத்தில் எழுந்தருளி, உற்சவம் நடைபெறும். அதை தொடர்ந்து, வீதியுலா செல்வார்.நாளை காலை, மாசி மக தீர்த்தவாரிக்காக, சுவாமி, கருட வாகனத்தில், கடற்கரை சென்று, திருமஞ்சனம் நடந்து, 8:30 மணிக்கு, கடலில் புனித நீராடுகிறார்.
* திருவிடந்தை: மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், சக்கரத்தாழ்வாருக்கு, நாளை காலை, 7:30 மணிக்கு, கடற்கரையில், திருமஞ்சனத்தைத் தொடர்ந்து, கடலில் புனித நீராடுகிறார்.பின், கோவிலை அடைந்து, நித்ய கல்யாண பெருமாளிற்கு, திருமஞ்சன வழிபாடு நடக்கிறது.சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினம் மலை மண்டல பெருமாள், ஆதிகேசவ பெருமாள், ஊத்துக்காட்டம்மன், பெரியபாளையத் தம்மன், செல்லியம்மன்; கல்பாக்கம் வெங்கடகிருஷ்ணர்.மேலும், ஸ்ரீனிவாசர், ஏகாம்பரேஸ் வரர்; விட்டிலாபுரம், பாண்டுரங்கர்; பெருமாள்சேரி ஆஞ்சனேயர்; ஈகை, முள்ளிகொளத்தூர், லட்சுமி நாராயணர், சுற்றுப்புற சுவாமிகள், நாளை (பிப்., 19ல்) காலை, 8:30 மணிக்கு, சதுரங்கப்பட்டினம் கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.