பதிவு செய்த நாள்
18
பிப்
2019
03:02
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பபு அடுத்த ஒரத்தூரில் பெரியாண்டவர், தூண்டில் வீரன் கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை துவக்க விழா நடந்தது.
சிதம்பரம் ஒரத்தூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர், தூண்டில் வீரன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (பிப்., 18ல்) காலை 9.00 மணிக்குமேல் 9.50 மணிக்குள் நடக்கிறது. அதற்கான யாகசாலை விழா நேற்று மாலை 4:00 மணியளவில் துவங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி, ப்ரவேசபலி, அங்குரார்பனம், கும்ப அலங்காரம், ரக் ஷாபந்தனம், யாக சாலை பிரவேசம் முதற்கால பூஜைகள், வேதபாராயணம் 108 திரவிய ஹோமங்கள், மகா பூர்ணாகுதி நடந்தது. இன்று (18ம் தேதி) காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பமும், அதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, ரக் ஷாபந்தனம், தத்துவார்ச்சனை, திரவியஹாமம், மூலமந்திரம், பூர்ணாகுதி, யாத்ராதானம் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு கடம் புறப்பாடாகி, பெரியாண்டவர் விமானத்திற்கும், தூண்டில் வீரனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாடு குடும்பத்திரான கடலூர் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ் நாயுடு குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.