பதிவு செய்த நாள்
18
பிப்
2019
04:02
பழநி : பிரதோஷத்தை முன்னிட்டு பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் நந்தி பகவான், மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன், பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம்வந்தனர்.இடும்பன் கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமா மகேஸ்வரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவுலா நடந்தது.
மலைக்கோயில் கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், அ.கலையம்புத்தூர் கல்யாணிசமேத கைலாசநாதர்கோயில், நேதாஜிநகர் காமாட்சிஅம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதன், புதுநகர் சிவன்கோயில்களில் பிரதோஷ அபிஷேகம், பூஜையில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
கன்னிவாடிபிரதோஷத்தை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.மூலவர், உற்சவர், நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. திருவாசக பாராயணத்துடன், உற்சவர் பிரகார வலம் நடந்தது.
* சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
* ஒட்டன்சத்திரம் பிரதோஷத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம் மற்றும் நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.