செஞ்சி கோதண்டராமர் கோவிலில் படிகளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2019 02:02
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் சங்கராபரணி ஆற்றில் மாசி மகம் நடக்க உள்ள தீர்த்தவாரி மண்டப படிகளுக்கு சிறப்பு பூஜைநடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் 700 ஆண்டுகள் பழமையான பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவில் உள்ளது.
படையெடுப்பினால் அழிக்கப்பட்ட இக்கோவிலில் பெரும் பகுதி மண்ணுக்குள் புதைந்து விட்டன. வழிபாடும் நடக்காமல் இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக மீண்டும் கோதண்டராமர் சிலையை நிறுவி வழிபாடு நடத்தி வருகின்றனர்.இந்தகோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தின் எதிரில் சங்கராபரணிஆற்றங்கறையில் இருந்த மண்டபத்தை ஒட்டிய மண்மேட்டை அகற்றினர்.அங்கு மண்ணுக்குள் அழகிய படிகள் மறைந்திருந்தது தெரியவந்தது. இங்குள்ள மண்டத்தில் இருந்து விழாக்காலங்களில்உற்சவர் சங்கராபரணி ஆற்றில் இறங்கி திருமஞ்சனம் செய்யவும், மாசி மகத்தன்று தீர்த்தவாரி செய்யவும் வசதியாக இந்த படிகளை அமைத்துள்ளனர்.
இதன் பிறகு ஆண்டு தோறும் படி பூஜை செய்து வருகின்றனர். இன்று (பிப்., 19ல்) மாசி மகம் தீர்த்தவாரி நடக்க உள்ளதால்,நேற்று படிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, தீபாராதனை யுடன் பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.