பதிவு செய்த நாள்
19
பிப்
2019
03:02
திருப்போரூர்:திருப்போரூர் பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் விழாவில், கோவில் உற்சவர் முத்துகுமார சுவாமி, ஆலத்தூருக்கு பார் வேட்டை சென்றார்.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 10ம் தேதி, கொடியேற்றதுடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. நேற்று (பிப்., 18ல்), முத்துகுமார சுவாமி பார் வேட்டை நடந்தது.
கந்தசுவாமி கோவிலில் இருந்து புறப்பட்ட, உற்சவர் முத்துகுமார சுவாமி, ஆலத்தூர் வந்ததும், வரவேற்பு அளிக்கப்பட்டது.பார் வேட்டை வந்த முருகப் பெருமானுக்கு, முயல், மலர் மாலை போன்றவற்றை பிரார்த்தனையாக செலுத்தினர்.நேற்று (பிப்., 18ல்) அதிகாலை ஆலத்தூரிலிருந்து புறப்பட்டு பூந்தண்டலம், திருப்போரூர் சான்றோர் தெரு வழியாக, மாலை கோவிலுக்கு திரும்பினார்.