பதிவு செய்த நாள்
19
பிப்
2019
03:02
அன்னூர்: பட்டக்காரன்புதூர், செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா வரும் 24ம் தேதி நடக்கிறது.பட்டக்காரன்புதூர் செல்வ கணபதி கோவிலில், புதிதாக கருங்கல்லில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் முருகன், கன்னிமார் மற்றும் கருப்பராயனுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வரும், 22ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில், திருக்குடங்கள் அழைத்து வருதல், முதற்கால யாக பூஜை நடக்கிறது.
23ம் தேதி காலையில் கோபுர கலசம் வைத்தலும், இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி பூஜையும், இரவு எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. 24ம் தேதி காலை 7:30 மணிக்கு, கோபுரம், பரிவார தெய்வங்கள் மற்றும் செல்வ கணபதிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கூனம்பட்டி ஆதீனம், ராஜ சரவண மாணிக்கவாசக சாமிகள் தலைமை வகிக்கிறார்.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், தொட்டிபாளையம், அருணை அருள்முருக அடிகள் பங்கேற்கின்றனர். பின்னர், அச்சம் பாளையம் குழுவின் பஜனை நடக்கிறது.