பதிவு செய்த நாள்
19
பிப்
2019
03:02
வால்பாறை: வால்பாறை கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, காசிவிஸ்வ நாதருக்கு மாசி மாதம் முதல் பிரதோஷ பூஜை நேற்று முன் தினம் (பிப்., 17ல்) நடந்தது.
மாலை, 5:30 மணிக்கு, காசிவிஸ்வநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது.அதன் பின், மாலை, 6:10 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. ரிஷப வாகனத்தில் தேவியருடன் காசிவிஸ்வநாதர் எழுந்தருளி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.