பழநி: மாசிமகத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் உலக நலன்வேண்டி 1008 சங்காபிஷேகம், யாகபூஜை நடந்தது.
பவுர்ணமி மாசிமகத்தை முன்னிட்டு, உலக நலன்வேண்டி, பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் குழுவினர், யாகசாலையில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கும்ப கலசங்கள் வைத்து பூஜை செய்தனர். கணபதி ஹோமம், ஸ்கந்தயாகம் மற்றும் வேதமந்திரங்கள் முழங்கினர். மதியம் 12:00மணி உச்சிகால பூஜையில் மூலவருக்கு புனிதகலச கும்பநீர் அபிஷேகம், சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடங்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.