Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் ... மையனுார் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி மையனுார் கோவிலில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
02:02

புதுச்சேரி : புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில், நுாற்றுக்கும் அதிகமான சுவாமிகள் எழுந்தருளின. ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி, வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர், செஞ்சி அரங்கநாதர், மயிலம்சுப்ரமணியர், மேல்மலையனுார் அங்காளம்மன், திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் ஸ்ரீனிவாசப்பெருமாள், தீவனுார் ஆதிநாராயணப் பெருமாள், லாஸ்பேட்டை சுப்ரமணியர், சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில்உள்ள அங்காள பரமேஸ்வரி, மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், முதலியார்பேட்டை வன்னியபெருமாள், கோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட சுவாமிகள் மேள தாளத்துடன் ஊர்வலமாக வைத்திக்குப்பம் கடற்கரைக்கு எழுந்தருள செய்யப்பட்டன.அங்கு தீர்த்தவாரிக்கு பிறகு, கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், சுவாமிகள் வரிசையாக பக்தர்கள் தரிசனத்திற்காக எழுந்தருள செய்யப்பட்டன.

துணை ராணுவ பாதுகாப்பு: கடலில் யாரும் இறங்கி குளித்து மூழ்கி இறந்துவிடாமல் இருக்க, நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் இருந்தனர். குறிப்பாக, முதல்வரின் போராட்ட பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த 4 மத்திய பாதுகாப்பு படை கம்பெனியில், இரு கம்பெனி திரும்பிவிட, மீதமிருந்த இரு கம்பெனி பாதுகாப்பு படையினர், மாசி மக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருக்கனுார்:கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் நடந்த தீர்த்தவாரியில் கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கே.ஆர்.பாளையம், சித்தலம்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சாமிகள் எழுந்சுவாமிகள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கூனிச்சம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். முதல் முறையாக அங்காளம்மன்திண்டிவனம், தீவனுார், செஞ்சி என, பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுவாமிகள் புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரியில் எழுந்தருளி வருகின்றன. ஆனால், இந்தஆண்டு முதல் முறையாக மேல்மலையனுார் அங்காளபரமேஸ்வரி அம்மன், மாசிமக தீர்த்தவாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar