கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தில் சாத்துார் பெருமாள்சுவாமி கோவில் உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜையில் சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்று பெருமாளை வழிபடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, மாசிமகம் திருவிழா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் சத்தியநாராய பூஜையுடன் துவங்கியது. இரவு, 7:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 8:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது.