பதிவு செய்த நாள்
21
பிப்
2019
02:02
அச்சிறுப்பாக்கம் : காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையில், நூற்றுக்கணக் கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுப் பாக்கத்தில் உள்ளது வஜ்ரகிரி மலை. வஜ்ரகிரி வடிவேலன் மலை என, போற்றப்படும் இத்தலத் திற்கு, தமிழகமெங்கும் பக்தர்கள் உள்ளனர்.
இம்மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரரை, தினந்தோறும் ரிஷிகளும், முனிவர்களும் வணங்குவதாக ஐதீகம்.போற்றுதலுக்கு உரிய இந்த மலையில், அரிய வகை மூலிகைகளும் உள்ளன. இந்த மலையை சுற்றி கிரிவலம் செல்வதால், உடல், மன நலம் கிடைப்பதாக, பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.சிறப்பு வாய்ந்த இம்மலையில், மாசி பவுர்ணமியை ஒட்டி, கிரிவலம் மிக சிறப்பாக நடைபெற்றது. கிரிவலத்தின் போது, சிவனடியார்களால் திருவாசகம், பன்னிரு திருமுறைகள் இசைக்கப்பட்டன. 8,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், கிரிவலம் சென்றனர்.