Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகர்கோவில் அருகே ராமதேவர் சித்தர், ... கம்மாபுரம் திரவுபதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

22 பிப்
2019
01:02

திருவாரூர்: குடவாசல் அருகே, செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, செம்மங்குடியில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில். இக்கோவிலில், கடந்த,2006 ல், கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 12 ஆண்டுகள் கழித்து திருப்பணிகள் முடிந்து, இன்று (பிப்.,22) மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த 18ம் தேதி காலை 7:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை நடந்தது. மறுநாள் 19 ம்தேதி மாலை 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. 20ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் காலபூஜையும், அன்று மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும் நடந்தன. 21ம்தேதி, காலை நான்காம் கால பூஜைகள், மாலை 5:00 மணிக்கு ஐந்தாம்கால பூஜைகள் நடந்தன. அன்று மாலை, 6:00 மணி முதல், கோபூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, கன்யாபூஜை,  சுவாசினி பூஜைகள் நடந்தன. இன்று காலை 6:00 மணிக்கு, ஆறாம்கால யாகசால பூஜைகள் துவங்கின. யாகசாலை பூஜைகள் முடிந்து, 8:20 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தன. பின், காலை, 8:45 மணிக்கு மூலவர், அம்பாள், நடராஜர், வினாயகர், சுப்ரமணியர் விமானங்களில் உள்ள கலசங்களில் புனிதநீர்  ஊற்றி, மகாகும்பாபிஷேகம் நடந்தது. அத்துடன், ஸ்ரீமகாமேரு மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை, ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar