Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துமாரியம்மன் கோவிலில் மகா மங்கள ... பூவராகசுவாமி கோவிலில் இன்று மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை வீரப்பூரில் வேடபரி விழா: மார்ச் 2ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2012
11:02

மணப்பாறை: மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர் பெரியக்காண்டியம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற வேடபரி விழா மார்ச் ஒன்றாம் தேதி நடக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது வீரப்பூர். இங்கு கொங்கு நாட்டு மக்கள் குல தெய்வமாக வழிபடும் ஸ்ரீபெரியக்காண்டியம்மன் என்னும் சப்த கன்னிமாரம்மன் வகையறா கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பொன்னர், சங்கர், தங்காள், மகாமுனி, சாம்புவன், மாசி கருப்பண்ணசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் குடி கொண்டுள்ளன. கோவில்கள் அண்ணன்மார் ஸ்வாமி கோவில் எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மணப்பாறை சுற்றுப்புற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் அண்ணன்மார் ஸ்வாமிகளை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் அண்ணன்மார் சுவாமிகளின் திருவிழாவும் ஒன்று. ஆண்டுதோறும் மாசி மாதம், சதய நட்சத்திரத்தன்று கொடியேற்றப்படும். தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக நடக்கும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 22ம் தேதி கொடியேற்றப்பட்டு, தினசரி விழாக்கள் நடந்து வருகிறது. முக்கிய விழாக்களின் ஒன்றான வேடபரி விழா வரும் மார்ச் ஒன்றாம் தேதி மாலை ஆறு மணிக்கு நடக்கிறது. பொன்னர் குதிரை வாகனத்தில் கையில் அம்புடன் செல்ல, பின்னே பெரியக்காண்டியம்மன் யானை வாகனத்தில் வர, அனியாப்பூர் வரை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர். பெரியக்காண்டியம்மன் திருத்தேரில் எழுந்தருளி, வலம்பெரும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, வரும் மார்ச் இரண்டாம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இறுதி விழாவான மஞ்சள் நீராட்டு விழா மூன்றாம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வீரப்பூர் ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான கிருஷ்ணவிஜயன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சி, குளித்தலை, கரூர், திண்டுக்கல், மணப்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar