பதிவு செய்த நாள்
24
பிப்
2019
01:02
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், முடி காணிக்கை மூலம், 7.94 கோடி ரூபாய் வசூலானதாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, தேவஸ்தானம், ரகம் வாரியாக தரம் பிரித்து, இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. இந்த ஏலம், மாதந்தோறும் முதல் வியாழக் கிழமை நடக்கும்.முதல் மற்றும் இரண்டாம் ரக தலைமுடிகள் அதிக அளவில் நிலுவையில் இருந்ததால், நேற்று தேவஸ்தானம், அவற்றை ஏலம் மூலம் விற்பனை செய்தது. அதில், 4,300 கிலோ தலைமுடி விற்பனையானதில், தேவஸ்தானத்திற்கு, 7.94 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.