வாலாஜாபாத் : பாலாஜி நகர், வரசித்தி விநாயகர் கோவிலில், நவக்கிரஹ கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் பாலாஜி நகரில் உள்ள, வரசித்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை, 11:25 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, விநாயகர் அருளை பெற்றனர்.