பதிவு செய்த நாள்
25
பிப்
2019
01:02
திருவள்ளூர், : தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு நடத்தப்படும், அபிஷேக ஆராதனையே அஷ்டமி பூஜையாகும். நாளை, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவில் ஆகியவற்றில் பைரவர் சன்னிதியில், மாலை, 5:30 மணி அளவில், அஷ்டமி பூஜை நடைபெறுகிறது. பைரவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு, மாலை, 6:00 மணி அளவில் மஹா தீபாராதனை நடைபெறுகிறது.