பதிவு செய்த நாள்
26
பிப்
2019
01:02
கொடுமுடி: கொடுமுடி, ஊஞ்சலூர் அருகே கருக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவர், மேதா சரஸ்வதி மஹா யாகம் நடந்தது. கல்வி, கேள்வி, ஞானம் ஆகிய மூன்று செல்வங்கள் கிடைக்க வேண்டி யும், மாணவ, மாணவியர் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், யாகம் நடந்ததாக, அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.