பதிவு செய்த நாள்
27
பிப்
2019
12:02
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மஹா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், நடைபெறும் விழாக்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பு வாய்ந்தது.
இவ்விழா, நேற்று (பிப்., 26ல்), காலை, 10:00 மணிக்கு கோவிலில் நடைபெற்றது. விழாவை ஒட்டி மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின், சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மலர் மாலைகளால் அலங்கரித்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.