Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.11 கோடி ... குமாரபாளையத்தில் கால பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைவாசலில் மகேஷ்வராஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2019
01:02

தலைவாசல்: மகேஷ்வராஷ்டமியையொட்டி, பைரவர் கோவில்களில், நேற்று (பிப்., 26ல்), சிறப்பு பூஜை நடந்தது.

தை மாத தேய்பிறை அஷ்டமி, மகேஷ்வராஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலிலுள்ள, அஷ்ட பைரவர் ஆலயத்தில், காலை, பால், தயிர் உள்ளிட்ட ஐந்து வகை பொருட்களால், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, ஐந்து வகை எண்ணெயால், பஞ்ச தீபமேற்றி, பைரவருக்கு உகந்த செவ்வரளிப் பூவை வைத்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர். பின், எட்டு பைரவர் களுக்கும், தனித்தனியாக சிறப்பு வழிபாடு நடந்தது. காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மஹா தீபாராதனை, யாகங்களில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

வெள்ளி கவசம்: ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், உலக நன்மை வேண்டி, யாக குண்டத்தில், வற்றல் மிளகாய், மூலிகைகள் கொட்டி, பிரித்தியங்கிரா தேவி மற்றும் சொர்ண பைரவருக்கு, பூஜை நடந்தது. மதியம், அம்மன், பைரவர் வெள்ளி கவசம், மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

சிறப்பு யாகம்: வாழப்பாடி, தான்தோன்றீஸ்வரர் கோவிலில், சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, காலபைரவருக்கு ஆராதனை, பூஜை நடந்தது. அதேபோல், வாழப்பாடி, அக்ர ஹாரம் காசிவிஸ்வநாதர் கோவில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர், கல்யாணகிரி தேன்மலை சிவாலயம், பேளூர் கரடிப்பட்டி கருணாகரேஸ்வரர் கோவில்களில், காலபைரவருக்கு பூஜை நடந்தது.

மாலைகளால்...: சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங்களிலிருந்த புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனம், திருநீறு, செவ்வரளிப்பூ, எலுமிச்சம் பழ மாலைகளால், பைரவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar