வால்பாறை: வால்பாறை கோவில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
தேய்பிறை அஷ்டமி, பைரவரை தரிசிப்பதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் காலபைரவருக்கு, அஷ்டமி தினமான நேற்று முன் தினம் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார வழிபாடும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.