பதிவு செய்த நாள்
28
பிப்
2019
02:02
திருவள்ளூர்: திருவள்ளூர், ராகவேந்திரா சுவாமி மடத்தில், இன்று, (பிப்., 28ல்) தீபோற்சவமும், நாளை (மார்ச்., 1ல்), மகாலட்சுமி பூஜையும் நடைபெறுகிறது.
திருவள்ளூர் தெற்கு குளக்கரை தெருவில், ராகவேந்திரா சுவாமி மடத்தில், ஒவ்வொரு வியாழக் கிழமையும், தீபோற்சவம், வெள்ளிக்கிழமை, மகாலட்சுமி பூஜையும் நடைபெறும்.இன்று, (பிப்., 28ல்) இரவு, 7:15 மணி அளவில், தீபங்கள் ஏற்றப்பட்டு தீபோற்சவமும், நாளை (மார்ச் 1ல்) மாலை, 6:30 மணி அளவில் மகாலட்சுமி பூஜையும் நடைபெறும்.