Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொதுத்தேர்வு எழுதும் ... ஏகாம்பரர் கோவிலை சுற்றி 7 கேமரா: புராதன திட்ட பணிகள் தீவிரம் ஏகாம்பரர் கோவிலை சுற்றி 7 கேமரா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரோவில் உதய தினம்: பக்தர்கள் தியானம்
எழுத்தின் அளவு:
ஆரோவில் உதய தினம்: பக்தர்கள் தியானம்

பதிவு செய்த நாள்

01 மார்
2019
12:03

 புதுச்சேரி, சர்வதேச நகரமான, ஆரோவில், 51வது உதய நாளையொட்டி, நேற்று, போன் பயர் ஏற்றி, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் இருந்து, 15 கி.மீ.,யில் அமைந்துள்ள, ஆரோவில் சர்வதேச நகரை வடிவமைக்கும் பணியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள், ஜாதி, மதம், இனம், மொழி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகில், மனித இன ஒற்றுமையின் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து, முதன் முதலாக, தத்துவ ஞானி அரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது. ஆரோவில் குறித்த பொது அறிக்கை, 1965ல் வெளியிடப்பட்டது. 1966ல், ஆரோவில் குறித்த திட்டம், யுனெஸ்கோ பொது சபையில், இந்திய அரசால் வைக்கப்பட்டு, ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968, பிப்ரவரி 28ல், ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. நகரம் துவக்கப்பட்ட நாளில் இருந்து, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 51வது உதய தினம், நேற்று, கொண்டாடப்பட்டது. ஆரோவில்லில் வசிக்கும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மாத்திர் மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில், அதிகாலை, 4:30 மணிக்கு கூடினர். 5:00 மணிக்கு, போன் பயர் எனப்படும் தீ மூட்டி, 6:00 மணி வரை, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலில் ஒலிபரப்பானது.போன் பயர் தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar