Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாகாளியம்மன் திருவிழா சிறப்பு ... மகா சிவராத்திரி விழா கோலாகலம் : கோயில்களில் குவிந்த பக்தர்கள் மகா சிவராத்திரி விழா கோலாகலம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை கோயிலில் 12 மணி நேர நாட்டியாஞ்சலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2019
08:03

 ராமநாதபுரம்:மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் தேவஸ்தானம் மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் 300 பரத கலைஞர்கள் பங்கேற்கும் 12 மண நேர தொடர் நாட்டியாஞ்சலி நடக்கிறது.

உத்தரகோசமங்கையில் மங்களநாத சமேத மங்களேஸ்வரி அம்மன் என்ற பழமையான கோயில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இங்கு மகாசிவராத்திரி திருநாளான இன்று(மார்ச் 3) மாலை 6:00 மணி முதல் தொடர்ந்து இடை விடாமல் காலை 6:00  மணி வரை 12:00 மணி நேரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அனுமதி இலவசம். 1,500 பேர் நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இருந்து 10 க்கும் மேற்பட்ட குழுக்கள் வருகின்றன. 72 பரதக்கலைஞர்கள் உட்பட 300 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.சுமனா ரமேஷ், ஸ்வர்ணமால்யா, ஸ்ருதி சேகர், ஊர்மிளா சத்தியநாராயணன், சைலஜா, அஸ்ரிதா வேமுகண்டி, ஸ்ரீராம் உட்பட முக்கிய  பரத கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இரவு முழுவதும் அரசு சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கலைப்பண்பாட்டுத்துறை, அரசு இசைப்பள்ளிகளின் கலையியல் அறிவுரைஞர் பூர்ண புஷ்கலா கூறியதாவது:அரசு சார்பில் இது போன்று தொடர்ந்து 12:00  மணி நேரம் நாட்டியாஞ்சலி நடத்துவது இதுவே முதன் முறையாகும். இதில் கலைமாமணி விருது பெற்ற பரத கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

அனைவருக்கும் கலை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடக்கிறது, என்றார்.ராமநாதபுரம் தேவஸ்தான நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் கூறுகையில், மங்களநாதசுவாமி கோயில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கலைபண்பாட்டுத்துறை, இந்துசமய  அறநிலையத்துறை, தேவஸ்தானம் இணைந்து நடத்துகிறது. தேவஸ்தானம் சார்பில் மேடை அரங்கு, மற்று பார்வையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படவுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar