காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வரும் 12–ம் தேதி தொடங்க உள்ளதால் காப்பு தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி – பங்குனி விழாவை ஊர் மக்கள் இணைந்து கொண்டாடுகின்றனர். 41 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மட்டுமன்றி 41 நாட்களும் கலை நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா வரும் 12–ம் தேதி கொடியேற்றம் காப்பு கட்டுடன் தொடங்குகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமன்றி பணி நிமித்தம் இங்கு வந்து குடியேறியவர்களும் காப்பு கட்டி விரதம் இருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். திருவிழாவின் முதல் ஒன்பது நாட்களும் எங்கும் மஞ்சள் ஆடை, மஞ்சள் மயமாகவே காட்சியளிக்கும். இதற்கான காப்பு தயாரிக்கும் பணியில் லலிதா முத்துமாரியம்மன் சேவைக்குழு பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.