திருப்பரங்குன்றத்தில் சுவாமிக்கு போலி பட்டுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2019 12:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் சுவாமிகளுக்கு போலி பட்டு, கோரா பரிவட்டங்கள் சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோயிலில் மார்ச் 13ல் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் மார்ச் 25 வரை சுவாமி தினம் ஒரு மண்டகப்படிகளில் எழுந்தருளுவார். அங்கு மண்டகப்படி தாரர்களால் சுவாமிக்கு பட்டு, பரிவட்டங்கள் வழங்கப்படும். இந்தாண்டு மண்டகப்படிதாரர்கள், திருக்கண் வைப்பவர்கள் சுவாமிக்கு நயமான பட்டு, பரிவட்டங்களை வாங்கி ஒருநாள் முன்னதாகவே கோயில் உள்துறை பொறுப்பாளர்களிடம் காண்பித்து கட்டண ரசீது பெற வேண்டும். அப்போதுதான் சுவாமி மண்படத்தில் எழுந்தருளச் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.