சூலுார்: சூலுார் அடுத்த மாதப்பூர் ஊராட்சி ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா துவங்கியது.வரும் 11ம் தேதி விநாயகர் பொங்கல் வைத்தல்; 13ல் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் பூவோடு ஊர்வலமும், மறுநாள் காலை, 11:00 மணிக்கு மாகாளியம்மன் உற்சவர் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. நேர்த்திக்கடனாக 200க்கும் அதிகமான கிடாய்கள் வெட்டப்படும்.