பதிவு செய்த நாள்
09
மார்
2019
01:03
எலச்சிபாளையம்: அள்ளாளபுரம் புடவை காரியம்மன், வீரகாரன் கோவிலில் திருவிழா நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், அள்ளாளபுரம் புடவைகாரியம்மன், வீரகாரன் கோவிலில் கடந்த, 4 இரவு, 8:00 மணிக்கு, மஞ்சள் முடிப்புடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம், சுவாமி கும்பிடுதல் நடந்தது. நேற்று, கோவிலில் இருந்து, பொங்கல் பானை எடுத்து செல்லப்பட்டது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு வீரகாரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்க உள்ளது. 11 மதியம், 12:00 மணிக்கு மறு அபிஷேகத்துடன் திருவிழா முடிகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.