பதிவு செய்த நாள்
11
மார்
2019
01:03
குன்னுார்:குன்னுார் அருவங்காடு பகுதியில் முத்தப்பன் திருவப்பன் திருவிழா விமரிசையாக நடந்தது.குன்னுார் அருகே அருவங்காடு கலைமகள் ஜங்ஷன் செட்டியார் காலனி மைதானத்தில், முத்தப்பன் பக்தஜன சமிதி சார்பில், 11வது ஆண்டு முத்தப்பன் திருவப்பன திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
குத்து விளக்கேற்றல், முத்தப்பன் மலையிறக்கல், கலசாட்டம், முத்தப்பன் வெள்ளாட்டம், பள்ளி வேட்டை, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. வெள்ளாட்டம், பள்ளிவேட்டையில், செண்டை வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய நடனத்துடன், வாள், அம்புகளுடன் நடனம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.தொடர்ந்து, சொர்னுார் பிரபஞ்சம் கலாவேதியின், பெரசீனா கலாரூபம், செண்டை மேளம் ஆகியவற்றுடன், தாலப்பொலி ஊர்வலம், கலிக்கபாட்டு, கலசம் எழுந்தருளல் ஆகியவை நடந்தன.
நேற்று 9:30 மணிக்கு முத்தப்பன் திருவப்பன் திருமுடி சார்த்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வேட்டை பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம், தீபாராதனை, பய்யம்குற்றி, மலை ஏற்றல் ஆகியவற்றுடன் விழா நிறைவுபெற்றது. இதன் சமிதி நிர்வாகிகள் கூறுகையில், கேரளாவில் கண்ணுார் பரிசினிகடவில் ஆதிசிவன் முத்தப்பன் கோவிலில், நடத்தப்படுவதை போன்று அருவங்காட்டிலும், ஆதிசிவன், மகாவிஷ்ணு ஆகியோரை போற்றும் வகையில் முத்தப்பன், திருவப்பன் திருவிழா பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.