Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி உத்திர ஆராட்டு சபரிமலையில் ... காரைக்குடி முத்துமாரியம்மன் கொடியேற்றம் காரைக்குடி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம்: மார்ச் 23ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம்: மார்ச் 23ல் கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 மார்
2019
11:03

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. மார்ச் 23ல் சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. நேற்று காலை கோயில் யானை தெய்வானைமீது கொடிப்பட்டம் வைத்து ரத வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. காலை 11:00 மணிக்கு சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றினர். கொடிகம்பத்தின் அடிப்பகுதியில் பால் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது.

திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. திருவிழா நடக்கும் மார்ச் 25 வரை காலையில், தங்க சப்பரம், தங்க பல்லக்கு, இரவில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்னம், வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடாய், பச்சைக்குதிரை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 16 இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சியும், மார்ச் 17ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 18 காலையில் கங்காளநாதர், இரவு சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, மார்ச் 19 பச்சை குதிரை ஓட்டம், மார்ச் 20 பங்குனி உத்திரம், மார்ச் 21 சூரசம்ஹார லீலை நடக்கிறது. மார்ச் 22 பட்டாபிஷேகம், மார்ச் 23 திருக்கல்யாணம், மார்ச் 24 தேரோட்டம், மார்ச் 25 தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar