வடமதுரை:வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழா இன்று (மார்ச் 19) துவங்குகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வடமதுரை பெருமாள் சுவாமி திண்டுக்கல் நகர் பகுதிக்கு சென்று நூற்றுக்கணக்கான திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை பங்குனி திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு திருவிழாவிற்காக இன்று (மார்ச்., 18ல்) காலை 10:00 மணிக்கு சுவாமி பல்லக்கில் புறப்பட்டு இரவு முள்ளிப்பாடியில் தங்குகிறார்.நாளை (மார்ச் 20) காலையில் முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளிப்பார். அன்று மாலை துவங்கி மார்ச் 26 இரவு வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் குதிரை, கருட, புஷ்ப பல்லக்குகளில் எழுந்தருள்வார். மார்ச் 27ல் வடமதுரை கோயில் சன்னதிக்கு பெருமாள் திரும்புவார். ஏற்பாட்டினை கோயில் செயல்அலுவலர் நாராயணி, தக்கார் மகேஸ்வரி செய்து வருகின்றனர்.