மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2019 03:03
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்ச் 21 பங்குனி உத்திரத்தன்று காலை 10:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஷ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர் திருவாப் புடையார் கோயிலில் எழுந்தருள்கின்றனர்.
அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்த பின் மாலை சுந்தரேஷ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோயிலுக்கு வந்தடைவர். பின் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம், தீபாராதனை முடிந்து கோயில் சேத்தியாகும். விழாவையொட்டி மார்ச் 21 வரை கோயில் மற்றும் உபயதாரர் சார்பாக அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக் கல்யாணம் பதிவு செய்து நடத்திட இயலாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பங்குனி உத்திர விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.