பதிவு செய்த நாள்
20
மார்
2019
11:03
பழநி: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோவிலில் இன்று (மார்ச்., 20ல்) திருக்கல்யாணமும், நாளை (மார்ச்., 21ல்)மாலை தேரோட்டமும் நடக்க உள்ளன.
பழநிமுருகன் கோவில் பங்குனி உத்திரவிழா மார்ச், 15ல் துவங்கியது. தினமும் தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
விழாவில் இன்று (மார்ச்., 20ல்) இரவு திருஆவினன்குடி கோவில் அருகேயுள்ள மண்டபத்தில், முத்துக் குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. நாளை (மார்ச்., 21ல்) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலைக்கோவில் அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை, 4:30மணிக்கு கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது.