பதிவு செய்த நாள்
20
மார்
2019
11:03
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று, (மார்ச்., 20ல்)திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழா, 11ம் தேதி துவங்கியது.
விழாவின் கடைசி நாளான இன்று (மார்ச்., 20ல்) காலை, கூத்தப் பெருமான் திருக்காட்சியும், தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு, புன்னை மரத்தடியில்,
உமாதேவியார் மயிலுருவுடன், மாதவரை வழிபடல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, திருகல்யாண வைபவம் நடக்கிறது.