ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 72.27 லட்சம்ரூபாய்உண்டியல் காணிக்கை கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 35 நாட்களுக்குபின்நேற்று சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் ஊழியர்கள் திறந்து சேகரித்தனர்.
பின் கோயில் கல்யாண மண்டபத்தில் காணிக்கையை பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் எண்ணினர். இதில் 72 லட்சத்து 27 ஆயிரத்து 843 ரூபாய் பணம், 130 கிராம் தங்கம், 2 கிலோ 275 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலை செல்வம், கண்ணன் உள்பட பலர் இருந்தனர்.