பொள்ளாச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் தும்பிக்கையாழ்வார் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2019 03:03
பொள்ளாச்சி : பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (மார்ச்., 21ல்) தும்பிக்கையாழ்வார் பிரதிஷ்டை விழா நடக்கிறது.
பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் தும்பிக்கையாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இன்று (மார்ச்., 21ல்) காலை, 5:00 மணிக்கு சுவாமி பிரதிஷ்டை விழா நடக்கிறது.இதற்காக, நேற்று (மார்ச்., 20ல்) மாலை யாக பூஜைகள் நடத்தப்பட்டன. தும்பிக்கையாழ்வார் பிரதிஷ்டை விழாவை தொடர்ந்து, கோவிலின் மடப்பள்ளி திறப்பு விழாவும் நடக்கிறது.