பதிவு செய்த நாள்
22
மார்
2019
11:03
மண்ணடி: மண்ணடியில் அமைந்துள்ள, மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு, வெகு விமரிமையாக நடந்தது.
மண்ணடியில் உள்ள, மல்லிகேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, ஏப்., 4ம் தேதி வரை, நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, சிவனடியார் சேவா சங்கம் மற்றும் மல்லிகேஸ்வரர் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.கடந்த, 12ம் தேதி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கிய நிலையில், 15ம் தேதி, 63 நாயன்மார்களுடன், உற்சவர் தேர் பவனியும்; 17-ம் தேதி பஞ்ச மூர்த்திகளின் திருத்தேர் பவனியும் நடந்தது.நேற்று முன்தினம் இரவு, மல்லிகேஸ்வரர் - மரகதாம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு, பவனி உற்சவம் நடைபெற்றது.வரும், 24ம் தேதி, தங்க ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் புறப்பாடு நடக்கிறது. 4ல், ஏகாந்த சேவை, சங்காபிஷேகம், உற்சவர் ஆஸ்தானத்திற்கு எழுந்தருள் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.