புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு சஹஸ்ர சங்காபிஷேகம் நடைபெற்றது.மணக்குள விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டையொட்டி, நேற்று காலை 7.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, சிறப்பு ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.11.00 மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு, மூலவர் மணக்குள விநாயகருக்கு கலசாபிஷேகம், 1008 சங்காபிஷேகம், உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, துாபதீப நைவேத்திய சோடசோபசார தீபாராதனை நடந்தது. இரவு 7.00 மணிக்கு உற்சவமூர்த்தி வீதியுலா நடந்தது.