பதிவு செய்த நாள்
22
மார்
2019
02:03
கொடைக்கானல்: குறிஞ்சியாண்டவர் கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.
கொடுமுடி மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் மற்றும் காவடி எடுத்து வந்தனர். பால் பன்னீர், பறவைக்காவடி எடுத்தனர். கலையரங்கத்தில் தொடங்கிய ஊர்வலம் குறிஞ்சியாண்டவர் கோயிலில் நிறைவடைந்தது. தீர்த்தங்கள் முத்திரிக்கபட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கனோர் காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். தாண்டிக்குடி பாலமுருகன், பண்ணைக்காடு சுப்ரமணியசுவாமி, பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் களிலும் பங்குனி உத்திரவிழாவில் பக்தர்கள் காவடி எடுத்தும், தீர்த்தங்கள் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பாக நடந்தது.
ஆவிளிப்பட்டியில் விழா ஆவிளிப்பட்டி ஆதிசுயம்பு ஈஸ்வரர் - அபிராமி சன்னதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. முருகனுக்கு 16 வகை அபிஷேகம்,
அலங்காரம், பஞ்சாமிர்த நெய்வேத்தியம், தீபதூப ஆராதனை நடந்தது.
ஆதிசுயம்பீஸ்வரர், அபிராமிக்கும் வலம்புரி வித்யாகணபதி, காலபைரவர், நாகவள்ளி தாயார் உட்பட பல்வேறு தெய்வங்களுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன. பசுவுக்கு தாம்பூலம், ஆராதனை, காப்பரிசி, அகத்திக்கீரை தரப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி உதயகுமார்,
அர்ச்சகர் வீரசபரி ஆகியோர் செய்திருந்தனர்.