பதிவு செய்த நாள்
22
மார்
2019
03:03
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவிலில், பங்குனி உத்திர விழா நடந்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின், உபகோவில்களில் ஒன்றான திருமலை சொக்கம்மன் கோவில், கிரிவலப்பாதையில் உள்ளது.
பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்கள், மலைமீது அமைந்துள்ள இக்கோவிலில், வழிபட்டு செல்வர்.இக்கோவிலில் நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்), பவுர்ணமி யுடன், பங்குனி உத்திர விழாவை ஒட்டி, மூலவர் சொக்கம்மனுக்கு, அபிஷேக ஆராதனை நடந்தது.தொடர்ந்து, சொக்கம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்திருந்தார்.