திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2019 03:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ தூரம் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்வர். அதன்படி நேற்று பங்குனி மாத பவுர்ணமி திதி நேற்று (மார்ச்., 21ல்)காலை, 10:03 மணிக்கு தொடங்கி, இன்று (மார்ச்., 22ல்) காலை, 7:41மணி வரை உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர்.