பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மின்தீப அலங்கார தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் நான்கு மாட வீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது சக்தி கோஷம் விண்ணை முட்டியது. தொடர்ந்து இன்று அதிகாலை துவங்கி 10:00 மணி வரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வருகின்றனர். தொடர்ந்து அபிஷேகம், இரவு பூப்பல்லக்கில் சயன கோலத்தில் அம்மன் வீதிவலம் வந்தார்.