பதிவு செய்த நாள்
23
மார்
2019
02:03
பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு பால், தயிர், தேன், நெய் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா கடந்த, 11ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது; மறுநாள் கொடியேற்றம் நடந்தது. அடுத்தடுத்த நாட்களில், அதி மூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு நிகழ்வும், வெள்ளி ரிஷப வாகன காட்சியும், அறுபத்து மூவர் திருக்காட்சியும் நடந்தன.
தொடர்ந்து, யாக சாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தன. கடந்த 18ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி அம்பாள், சோமாஸ்கந்தர், விநாயகர், முருகப்பெருமானை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். நேற்று (மார்ச்., 22ல்) அதிகாலை, 3:30 மணிக்கு மேல், நடராஜ பெருமானுக்கு பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.